×

கோவை கிரெடாய் அமைப்பு சார்பில் ‘பேர்புரோ’ மெகா ரியல்எஸ்டேட் கண்காட்சி ஆக.29-ல் துவக்கம்

கோவை, ஜூலை 27:  கிரெடாய் கோவை அமைப்பு நடத்தும் ‘பேர்புரோ மெகா ரியல் எஸ்டேட்’ கண்காட்சி வருகிற 29ம் தேதி முதல் 31ம் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. இது ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள், வீடு வாங்குவோர் மற்றும் வங்கியாளர்களை ஒரே கூரையின் கீழ் ஒன்றிணைக்கிறது. வீடு வாங்க விருப்பம் உள்ள ஒவ்வொருவரும் தமது பட்ஜெட், இருப்பிடம் மற்றும் தேவைக்கு ஏற்ப தனக்கேற்ற கனவு இல்லத்தை தேர்ந்தெடுக்கலாம். தேர்ந்தெடுக்கப்படும் வீடு அல்லது வீட்டு மனைக்கு உடனடி கடன் வசதி அளிக்க பாரத ஸ்டேட் பாங்க் மற்றும் இதர வங்கிகள் அரங்குகள் அமைக்க உள்ளன. இக்கண்காட்சிக்கு ஒவ்வொரு ஆண்டும் மக்களிடையே பெரும் வரவேற்பு உள்ளது.

இது குறித்து கோவை கிரெடாய் அமைப்பின் தலைவர் குகன் இளங்கோ, செயலாளர் ராஜீவ் ராமசாமி, கண்காட்சி தலைவர் சுரேந்தர் விட்டல் மற்றும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மண்டல மேலாளர் இன்பரசு ஆகியோர் கூறியதாவது: கோவை கிரெடாய் சார்பில் 12வது கிரெடாய் பேர்புரோ கண்காட்சி கொடிசியா வளாகத்தில் வரும் ஜூலை 29 முதல் 31ம் தேதி வரை காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடக்க உள்ளது. இக்கண்காட்சியில் 30க்கும் மேற்பட்ட ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள், 75க்கும் மேற்பட்ட ரெரா (RERA) அங்கீகாரம் பெற்ற புராஜெக்ட்களை காட்சிப்படுத்துகின்றனர்.  இக்கண்காட்சியில் 5 வங்கிகள் மற்றும் பல்வேறு வீட்டு உபயோக பொருட்கள் விற்பனையாளர்கள் கலந்து கொள்கின்றனர்.

ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புகள் முதல் ஹாலிடே வில்லாக்கள், கேட்டட் கம்யூனிட்டிகள், வீட்டு மனைகள் மற்றும் முதியோருக்கான இல்லங்கள் வரை இக்கண்காட்சியில் புராஜெக்டுகளும் புதிதாக அறிமுகப்படுத்தப்படும். கிரெடாய் பேர்புரோ கண்காட்சியானது வீடு வாங்க விருப்பம் உள்ளவர்களுக்கு தேவையான தகவல்கள் முதல், வங்கிக் கடனுக்கான ஆலோசனையும் ஒரே இடத்தில் அளித்து மக்களின் கனவு இல்லத்தை நனவாக்குகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : Bearpro ,mega real estate fair ,Coimbatore Credai ,
× RELATED டோல்கேட் அவசரகால வழி வசூல் மையத்தை அகற்ற வேண்டும்