×

வாசிப்பு மாரத்தான் போட்டியில் காளையார்கோவில் முதலிடம்

காளையார்கோவில், ஜூன் 25: தமிழகம் முழுவதும் ஜூன் முதல் இரண்டு வாரங்கள் வாசிப்பு மாரத்தான் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் சிவகங்கை மாவட்டத்தில் 12 ஒன்றியங்கள் பங்கேற்றன. இப்போட்டியில் அதிகப்படியான நேரம் மற்றும் அதிகப்படியான கதைகளை வாசித்த ஒன்றியங்கள் பரிசுகளை தட்டிச் சென்றன. அந்த வரிசையில் சிவகங்கை மாவட்டத்தில் காளையார்கோவில் ஒன்றியம் அதிகப்படியான கதைகளை வாசித்து முதலிடம் பிடித்து சாதனை புரிந்துள்ளது. காளையார்கோவில் ஒன்றிய மாணவர்கள் 63,33,002 வார்த்தைகளை வாசித்து முதலிடம் பிடித்தனர். போட்டியில் வெற்றி பெற உறுதுணையாக இருந்த அனைத்து இல்லம் தேடி தன்னார்வலர்களுக்கும் மற்றும்  இல்லம்தேடி கல்வி வட்டார ஆசிரிய ஒருங்கிணைப்பாளர்கள் பட்டதாரி ஆசிரியர் சுரேஷ், இடைநிலை ஆசிரியர் ராக்கப்பன், இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் செல்வராணி ஆகியோருக்கு காளையார்கோவில் ஒன்றிய வட்டார வள மைய மேற்பார்வையாளர் கஸ்தூரிபாய், வட்டார கல்வி அலுவலர்கள் சகாய செல்வன் ஜேம்ஸ் மற்றும் ஆலிஸ் மேரி ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.

Tags : Kaliningrad ,
× RELATED போக்குவரத்து நெருக்கடியை குறைக்க...