கோவை, ஜூன்.25: தமிழ்நாடு சுயநிதி கலை அறிவியல் மேலாண்மை கல்லூரிகளின் சங்கம் சார்பாக கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினர்களாக நியமனமானவர்களுக்கான பாராட்டு விழா கோவை ரேஸ்கோர்ஸில் உள்ள காஸ்மோ பாலிட்டன் கிளப்பில் நடைபெற்றது. கோவை மேற்கு மண்டல காவல் துறை தலைவர் சுதாகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினர்களாக கோவை ஏஜெகே கலை அறிவியல் கல்லூரியின் செயலாளர் அஜீட் குமார்லால் மோகன், பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணமால் மகளிர் கல்லூரியின் செயலாளர் யெசோதா தேவி, நீலகிரி கலை அறிவியல் கல்லூரியின் செயலாளர் ராஷித் கசாலி, சத்தியமங்களம் காமதேனு கலை அறிவியல் கல்லூரியின் செயலாளர் அருந்ததி, கோவை எஸ்என்எஸ் ராஜலட்சுமி கலை அறிவியல் கல்லூரியின் நளின் விமல்குமார் ஆகிய 5 பேரை தமிழக அரசு நியமித்துள்ளது. இவர்கள் இவ்விழாவில் கவுரவிக்கப்பட்டனர். மேலும், தேசிய தரச்சான்று மதிப்பீட்டு தரச்சான்றிதழில் முதல்தர கிரேடு அங்கீகாரம் பெற்ற ரத்தினம் கலை அறிவியல் கல்லூரி, பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி, ஏஜெகே கலை அறிவியல் கல்லூரி உள்ளிட்ட 20 கல்லூரிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில், தமிழ்நாடு சுயநிதி கலை அறிவியல் மேலாண்மை கல்லூரிகள் சங்கத்தின் செயலர் சேதுபதி, துணை தலைவர் ராஜ்குமார், செந்தில், செயலர் கலைமான் மற்றும் பல்வேறு கல்லூரிகளின் முதல்வர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.