×

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலையில் ஏரல் பேரூராட்சி கவுன்சிலர் உள்பட அமமுகவினர் திமுகவில் ஐக்கியம்

தூத்துக்குடி, ஜூன் 25:  ஏரல் பேரூராட்சி 4வது வார்டு கவுன்சிலர் உள்பட அமமுகவினர், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். ஸ்ரீவைகுண்டம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் கோட்டாளம் ஏற்பாட்டில் ஏரல் பேரூராட்சி 4வது வார்டு அமமுக கவுன்சிலர் பெரியசாமி என்ற ஆனந்த் மற்றும் ஏரலை சேர்ந்த அமமுக நிர்வாகிகள் விக்னேஷ், சுரேஷ்குமார், சுரேஷ் முருகன், சதீஷ், மணிகண்டன், ராதாகிருஷ்ணன், மாரியப்பன், அற்புதராஜ் உள்ளிட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி, தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

இதில் திமுக மாணவரணி துணை செயலாளர் உமரிசங்கர், முன்னாள் எம்எல்ஏ டேவிட்செல்வின், ஸ்ரீவைகுண்டம் கிழக்கு ஒன்றிய செயலாளர் கோட்டாளம், ஏரல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி துணை தலைவர் மணிவண்ணன், ஏரல் பேரூராட்சி துணை த்தலைவர் ஜான், பொறியாளர் அணி அமைப்பாளர் ஆனந்த், மாவட்ட மாணவரணி இணை அமைப்பாளர் பிரபாகரன், ஒன்றிய இளைஞரணி ஜான்பாண்டியன், பழையகாயல் இணை செயலாளர் ஜான்சன், ஒன்றிய துணை செயலாளர் ராமசுப்பிரமணியன், சோலைமணி, 9வது வார்டு கவுன்சிலர் சாதிக் அலி, தொண்டரணி மாவட்ட துணை அமைப்பாளர் ஆறுமுகம், பெருங்குளம் செந்தில் ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Minister ,Anita Radhakrishnan ,Earl ,Municipal Councilor ,DMK ,
× RELATED பாஜக நிர்வாகிகளை விரட்டியடித்த குளச்சல் மீனவர்கள்