×

தூத்துக்குடியில் இன்றும், நாளையும் எஸ்ஐ பதவிக்கான எழுத்து தேர்வு

தூத்துக்குடி, ஜூன் 25:  தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் இன்றும்(25ம் தேதி), நாளையும்(26ம் தேதி) போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கான எழுத்து தேர்வு நடக்கிறது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் 6965 விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுதுகின்றனர். இந்த தேர்வு தூத்துக்குடியில் உள்ள 7 மையங்களில் நடக்கிறது. இந்த தேர்வு தொடர்பான ஆலோசனை கூட்டம், எஸ்பி பாலாஜி சரவணன் தலைமையில் நடந்தது. போலீசார், அமைச்சுப்பணியாளர்கள் தேர்வு மையத்தில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து எஸ்பி அறிவுரை வழங்கினார்.

தேர்வு பாதுகாப்பு பணியில் 2 ஏடிஎஸ்பிகள் மேற்பார்வையில் டிஎஸ்பிகள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட சுமார் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். கூட்டத்தில் தூத்துக்குடி ஏடிஎஸ்பிகள் கார்த்திகேயன், இளங்கோவன், ஏஎஸ்பி  ஸ்ரேயா குப்தா, டிஎஸ்பிகள் ஆவுடையப்பன், சங்கர், பிரேமானந்தன், சம்பத், சிவசுப்பு, கண்ணபிரான், ஷாமளா தேவி மற்றும் போலீசார், அமைச்சுப்பணியாளர்கள் கலந்து கொண்டனர். இதனிடையே இந்த தேர்வுக்கான வினாத்தாள் நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் தூத்துக்குடி மாவட்டத்துக்கு கொண்டு வரப்பட்டன. இந்த வினாத்தாள் பெட்டிகள், எஸ்பி பாலாஜி சரவணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து எஸ்பி அலுவலக வளாகத்தில் உள்ள அறையில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டன.

Tags : SI ,Thoothukudi ,
× RELATED எஸ்ஐ மனைவி அருகே பஸ்சில் அமர்ந்ததால்...