×

பூதப்பாண்டி அருகே பேராசிரியையை அரிவாளால் வெட்ட முயற்சி: வாலிபர் தப்பி ஓட்டம்

பூதப்பாண்டி, ஜூன் 25: பூதப்பாண்டி அருகே பேராசிரியையை அரிவாளால் வெட்ட முயற்சித்த வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள். குமரி மாவட்டம் பூதப்பாண்டி அடுத்த தெள்ளாந்தி கலைஞர் நகரை சேர்ந்தவர் சுபாஷ். இவரது மனைவி அஜிதா (33). கணவன், மனைவி இருவரும் ஆரல்வாய்மொழி அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியர்களாக பணியாற்றி வருகிறார்கள். கல்லூரி பணி முடிந்து மாலையில் வீட்டில் வைத்து  இருவரும், டியூஷன் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மாலை வழக்கம் போல் 2 பேரும் டியூஷன் எடுத்து கொண்டிருந்தனர்.

அப்போது அஜிதாவுக்கு செல்போனில் அழைப்பு வந்துள்ளது. இதையடுத்து அவர் வெளியே வந்து ெசல்போனில் பேசி கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த அஜித் என்பவர் அந்த வழியாக கடந்து சென்றார். அந்த சமயத்தில் அஜிதா வீட்டில் வளர்க்கப்படும் நாய், அஜித்தை பார்த்து குரைத்தது. இதனால் ஆத்திரம் அடைந்த அஜித், அஜிதாவை ஆபாசமாக திட்டி உள்ளார். இதை அஜிதா கண்டித்தார். இதனால் ஏற்பட்ட தகராறில் அஜித், அரிவாளால் அஜிதாவை வெட்ட முயன்றார். அதிர்ஷ்டவசமாக அவர் விலகியதால் உயிர் தப்பினார்.

அஜிதாவின் அலறல் சத்தம் கேட்டு வீட்டுக்குள் இருந்த அவரது கணவர் மற்றும் அக்கம் பக்கத்தினர் வந்தனர். அதற்குள் அஜித் தப்பினார். இது குறித்து அஜிதா, பூதப்பாண்டி போலீசில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் எஸ்.ஐ. சுந்தர்ராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். தலைமறைவான அஜித்தை தேடி வருகிறார்கள்.

Tags : Poothapandi ,Valipar ,
× RELATED ஸ்ரீதிவ்யா ஃபிட்னெஸ் சீக்ரெட்ஸ்!