×

கொல்லங்கோடு அருகே பைக்குகள் நேருக்கு நேர் மோதல் வெல்டிங் தொழிலாளி பலி


நித்திரவிளை, ஜூன் 14: கொல்லங்கோடு அருகே பாலவிளை பகுதியை சேர்ந்தவர் புஷ்பராஜ் (53). வெல்டிங் தொழிலாளி. நேற்றுமுன்தினம் இரவு சுமார் 8 மணி அளவில் வீட்டில் இருந்து கொல்லங்கோட்டிற்கு பைக்கில் செல்லும்போது ஊரம்பு பகுதியில் குழிஞான்விளை பகுதியை சேர்ந்த அருண் (27) அதிவேகமாக ஓட்டி வந்த பைக் மோதி உள்ளது. இதில் படுகாயமடைந்த புஷ்பராஜை அந்த பகுதியில் நின்றவர்கள் மீட்டு பாறசாலை உள்ள அரசு மருத்துவமனையில் முதலுதவி சிசிச்சை அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் வழியில் புஷ்பராஜியின் உடல் நிலை கவலைக்கிடமானது. இதையடுத்து நெய்யாற்றின்கரையில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர் புஷ்பராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளார். இது தொடர்பாக புஷ்பராஜியின் மனைவி மினி (43) கொல்லங்கோடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Kollankodu ,
× RELATED நாகர்கோவில் மாநகராட்சி, கொல்லங்கோடு...