கோவில்பட்டி, ஜூன் 14: கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம் பாண்டவர்மங்கலம் ஊராட்சியில் அங்கன்வாடி மையம் கட்டுவதற்கு சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.10.11 லட்சம் ஒதுக்கீடு செய்தார். இதையடுத்து அங்கன்வாடி கட்டிடம் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா பாண்டவர்மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட மந்தித்தோப்பு சாலை வெற்றிவேல் நகரில் நடந்தது.கடம்பூர் ராஜூ எம்எல்ஏ தலைமை வகித்து அங்கன்வாடி கட்டிட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இதில், ஊராட்சி ஒன்றியக்குழு துணை தலைவர் பழனிச்சாமி, ஒன்றிய செயலாளர் அன்புராஜ், அதிமுக நிர்வாகி போடுசாமி, வழக்கறிஞர் சங்கர் கணேஷ், ஒப்பந்தகாரர் தங்கராஜ், ஆவின் பால் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், நகர ஜெ. பேரவை செயலாளர் ஆபிரகாம் அய்யாத்துரை, மாரியப்பன், மாவட்ட மாணவரணி துணைத்தலைவர் செல்வகுமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஹேமலா, நகராட்சி கவுன்சிலர்கள் கவியரசன், செண்பகமூர்த்தி, வள்ளியம்மாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.