×

ஆபரேசன் கந்துவட்டியில் இரண்டு பேர் அதிரடி கைது

சிவகங்கை, ஜூன் 14:சிவகங்கை மாவட்டத்தில் ஆபரேசன் கந்துவட்டி நடவடிக்கையின் கீழ் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிவகங்கை மாவட்ட எஸ்பி செந்தில்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தமிழக அரசு கந்து வட்டியால் ஏழைகள், பொதுமக்கள் பாதிக்கப்படுவதை தடுக்க ஆபரேசன் கந்துவட்டி நடவடிக்கையை தொடங்கியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் இந்த நடவடிக்கையின் கீழ் திருப்பத்தூர் அருகே தென்மாபட்டை சேர்ந்த பழனிக்குமார்(65), காரைக்குடி ஆறுமுகம் நகரை சேர்ந்த செந்தில்(48) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கந்துவட்டி வசூல் செய்வது குறித்த புகார்களை 94441 14125(எஸ்.பி), டிஎஸ்பிக்கள் 83000 00628(சிவகங்கை), 94981 86264(காரைக்குடி), 94431 83707(திருப்பத்தூர்), 94981 90445(தேவகோட்டை), 83000 20336(மானாமதுரை) ஆகிய செல் எண்களில் தெரிவிக்கலாம். புகார் தெரிவிப்பவர்களின் ரகசியம் பாதுகாக்கப்படும். கந்துவட்டி வசூல் செய்யும் குற்றத்தில் ஈடுபட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.



Tags : Operation Kanduvatti ,
× RELATED ஆபரேஷன் கந்துவட்டி தடுப்பு...