×

வைகாசி தேர்த்திருவிழா

காளையார்கோவில், ஜூன் 14: காளையார்கோவில் சவுந்தரநாயகி அம்பாள், சமேத சோமேஸ்வரர் சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா 3ம் தேதி தொடங்கியது. 10ம் நாளான நேற்று முன்தினம் இரவு  சோமேஸ்வரர், சவுந்தரநாயகி அம்பாள் தெப்பத்தேரில் அமர்ந்து காட்சியளித்தன. தெப்பத்தை பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர். நிகழ்ச்சி ஏற்பாட்டை காளையார்கோவில் கண்காணிப்பாளர் பாலசரவணன், ஸ்தானிகம் சிவஸ்ரீ.காளீஸ்வர குருக்கள், சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் மேலாளர் இளங்கோ செய்திருந்தனர். விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர். திருவிழாவை தொடர்ந்து வடமாடு மஞ்சுவிரட்டு நடந்தது. இதில் 16 மாடுகள் மற்றும் ஏராளமான மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டார்கள்.


Tags : Vaikasi Election Festival ,
× RELATED திமுக கூட்டணிக்கு ஆதரவு