ஒட்டன்சத்திரம், ஜூன் 11:ஒட்டன்சத்திரம் தாலுகா அலுவலகத்தில் ஜூன் 1ம் தேி முதல் 10ம் தேதி வரை ஒட்டன்சத்திரம், சின்னக்காம்பட்டி, புலியூர்நத்தம், கள்ளிமந்தையம் குறுவட்டங்களில் உள்ள கிராமங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நல அலுவலர் விஜயா தலைமையில் ஜமாபந்தி நடைபெற்றது. இதில் பட்டா மாறுதல், உட்பிரிவு, ஆக்கிரமிப்பு அகற்றுதல், முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட 527 மனுக்கள் வரப்பட்டன. இதில் 300 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள மனுக்களுக்கு விசாரணை செய்து, தீர்வு காணப்படும் என தாசில்தார் முத்துச்சாமி தெரிவித்தார். இதில் மண்டல துணை தாசில்தார்கள் விஜயக்குமார், ராமசாமி, வருவாய் ஆய்வாளர் பத்மாவதி மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்