×

மெஞ்ஞானபுரத்தில் 1100 பேருக்கு நலத்திட்ட உதவிகள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்

உடன்குடி, ஜூன் 9: மெஞ்ஞானபுரத்தில் கலைஞர் பிறந்த நாளையொட்டி 1100 பேருக்கு நலத்திட்ட உதவிகள், மகளிர் குழுக்களுக்கு தையல் இயந்திரங்களை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்.கலைஞரின் 99வது பிறந்த நாளை முன்னிட்டு உடன்குடி ஒன்றிய திமுக சார்பில் மெஞ்ஞானபுரத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஒன்றிய செயலாளர் பாலசிங் தலைமை வகித்தார். உடன்குடி பேரூராட்சி துணை தலைவர் சந்தையடியூர் மால்ராஜேஷ், பஞ்சாயத்து தலைவர்கள் மெஞ்ஞானபுரம் கிருபா ராஜாபிரபு, செம்மறிக்குளம் அகஸ்டா மரியதங்கம், செட்டியாபத்து பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவரணி ராஜாபிரபு வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு 1100 பேருக்கு சேலைகள், 3 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு தையல் இயந்திரங்களை வழங்கினார். இதில் மாநில மாணவரணி துணை செயலாளர் உமரிசங்கர், முன்னாள் தலைமை செயற்குழு உறுப்பினர் எஸ்.ஜே.ஜெகன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் சீயோன்நகர் முத்துச்செல்வன், மாவட்ட அமைப்பாளர்கள் மகளிரணி ஜெஸி பொன்ராணி, இளைஞரணி ராமஜெயம், நெசவாளரணி மகாவிஷ்ணு, மாவட்ட துணை அமைப்பாளர்கள் வர்த்தக அணி ரவிராஜா, இளங்கோ, கலை இலக்கிய அணி ரஞ்சன், உடன்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் அஸ்ஸாப்கல்லாசி, கிளை நிர்வாகிகள் ஜெரால்டு தனராஜ், மைக்காரெத்தினராஜ், சாமுவேல், ஜோசப், எள்ளுவிளை கிளை செயலாளர் மோகன், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் கலந்து கொண்டனர்.

Tags : Minister ,Anita Radhakrishnan ,Menjanpuram ,
× RELATED ஒன்றியத்தில் சமதர்ம ஆட்சி அமைந்திட...