×

30 ஆண்டுகளுக்கு பின் மதுரையில் கிரேட் பாம்பே சர்க்கஸ்

மதுரை, ஜூன் 9: மதுரையில் 30 ஆண்டுகளுக்குப் பின் கிரேட் பாம்பே சர்க்கஸ் தற்போது நடைபெற்று வருகிறது.ஏழாம் அறிவு திரைப்பட புகழ் கிரேட் பாம்பே சர்க்கஸ், 30 ஆண்டுகளுக்கு பின் மதுரையில் தற்போது துவங்கி உள்ளது. கோ.புதூர் சி.எஸ்.ஐ. மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த கிரேட் பாம்பே சர்க்கஸ் குறித்து இதன் நிறுவனத் தலைவர் சஞ்சீவ் பாலகோபால் கூறியதாவது ``அந்தரத்தில் பறக்கும் ப்ளே டிரிபிள் எனப்படும் விளையாட்டு, ஸ்கேட்டிங் பந்துகளை காலால் உதைத்து சாகசம் செய்தல், ஸ்கைவாக், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்க நாட்டு கிளிகளின் சாகசங்கள் போன்ற சிறப்பு அம்சங்கள் இந்த சர்க்கசில் இடம் பெறுகின்றன. மேலும் 8 பந்துகளை கைகளால் லாவகமாக பிடிக்கும் ஜக்லின் விளையாட்டு, லூஸ்வேர் எனப்படும் கப் அன் சாசர் விளையாட்டு, ேஜாக்கர்களின் நகைச்சுவை விளையாட்டுகள் இந்த சர்க்கசில் சிறப்பு அம்சங்களாக இடம் பெற்றுள்ளன.மேலும் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்று பல்வேறு மயிருக்குச்செரியும் சாகச விளையாட்டுகளை செய்து காட்டுகின்றனர். கிளி, புறா மற்றும் நாய்கள் நடித்துக்காட்டும் பல்வகையான வித்தைகள், பார்வையாளர்களை கவரும் வகையில் உள்ளது. இந்த கிரேட் பாம்பே சர்ச்சஸ் தினமும் பகல் 1 மணி, மாலை 4 மணி, இரவு 7 மணி என 3 காட்சிகளாக நடைபெற்று வருகிறது. ரூ.100, ரூ.200 மற்றும் ரூ.300 என கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன’’ இவ்வாறு கூறினார்.

Tags : Great Bombay Circus ,Madurai ,
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...