×

விராலிமலை அருகே 3 குழந்தைகளுடன் பெண் மாயம்


விராலிமலை, ஜூன் 9: விராலிமலை அருகே குழந்தைகளுடன் ஊருக்கு சென்ற மனைவியை காணவில்லை என கணவர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். விராலிமலை தாலுகா இ.மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் சவரிமுத்து(40). இவர் திண்டுக்கல்லில் தங்கி கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவருக்கு சகாயசெல்வி(34) என்பவருடன் திருமணமாகி 3 பெண் குழந்தைகள் உள்ளது. இந்நிலையில் சவரிமுத்து கடந்த 1ம் தேதியன்று வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது தனது 2வது குழந்தை வீட்டில் இல்லாததைக் கண்டு குழந்தை எங்கே என மனைவியிடம் சவரிமுத்து கேட்டுள்ளார். அதற்கு சகாயசெல்வி குழந்தை தனது தாய் வீட்டில் இருப்பதாக கூறியுள்ளார். பின்னர் குழந்தையை அழைத்து வருவதாக சவரிமுத்துவிடம் கூறிவிட்டு மற்ற இரு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு வீட்டிலிருந்து சென்றவர் மீண்டும் வீட்டிற்கு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த சவரிமுத்து அக்கம் பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடியுள்ளார். எங்கு தேடியும் கிடைக்காததால் அவர் ஊருக்கு செல்வதாக கூறிவிட்டு தனது 2 குழந்தைகளுடன் சென்ற தனது மனைவியை காணவில்லை என விராலிமலை போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தார். அந்தப் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Viralimalai ,
× RELATED விராலிமலை ஊராட்சிக்கு இறந்தவர்களின்...