×

காரைக்கால் அருகே துணிகரம்

காரைக்கால், ஜூன் 9: காரைக்காலை அடுத்த வரிச்சிக்குடி கழுகு மேடு பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன்(29). இவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார். ஐயப்பன் தனது மனைவி ராஜவள்ளி மற்றும் குழந்தைகளுடன் பூவத்தில் உள்ள மாமியார் வீட்டிற்கு கடந்த 3ம் தேதி சென்றுள்ளார். நேற்று முன்தினம் காலை ராஜவள்ளி மீண்டும் வீடு திரும்பிய போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் கணவர் ஐயப்பனுக்கு போன் செய்து அழைத்து வீட்டின் உள்ளே சென்று பார்த்த பொழுது பீரோ கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த சுமார் இரண்டு லட்சம் மதிப்புள்ள நகைகளை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றதை கண்டு அதிர்ந்தனர். திருட்டு தொடர்பாக ஐயப்பன் கோட்டுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

Tags : Karaikal ,
× RELATED வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்பு;...