×

தச்சை தாராபுரத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

நெல்லை, ஜூன் 8: நெல்லை மாநகராட்சி தச்சநல்லூர் மண்டலத்துக்குட்பட்ட பகுதி தாராபுரம். தாராபுரம் ஊரின் முன்பகுதியில் சுமார் 35க்கும் அதிகமான வீடுகள் உள்ளன. இப்பகுதிக்கு தச்சநல்லூர் பைபாஸ் சாலையில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும். இந்நிலையில் தாராபுரம் மெயின்ரோடு பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கடந்த சில மாதங்களாக மாநகராட்சி குடிநீர் முறையாக விநியோகம் செய்யப்படாத நிலை தொடர்கிறது.இப்பகுதிக்கு வரும் குடிநீர் பிரதான குழாயில் அடைப்பு உள்ளதால் சீராக விநியோகம் செய்யப்படாத நிலை பல மாதங்களாக தொடர்கிறது. இதனால் பிறபகுதிகளுக்கு பைக் மற்றும் சைக்கிளில் குடங்களை கட்டிக்கொண்டு தண்ணீர் எடுத்து வரும் அவலநிலை தொடர்கிறது. இதுகுறித்து மாவட்ட, மாநகராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. இதனால் பொதுமக்கள் காலி குடங்களுடன் தாராபுரம் பஸ் நிறுத்தம் பகுதியில் நெல்லை - மதுரை சாலையில் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் 20 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து தச்சநல்லூர் இன்ஸ்பெக்டர் டேவிட் ரவிராஜ் (பொ) மற்றும் போலீசார், மாநகராட்சி உதவி கமிஷனர் லெனின் மற்றும் அதிகாரிகள் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Tags : carcass tarapuram ,
× RELATED விருதுநகரில் சதம் அடித்து விளையாடும்...