×

மானூர், கங்கைகொண்டான், சுத்தமல்லியில் எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாம்

நெல்லை, ஜூன் 8:  மானூர் வட்டார வள மையம், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 3ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாம் மானூர், கங்கைகொண்டான், சுத்தமல்லி ஆகிய 3 இடங்களில் 5 நாட்கள் நடக்கிறது. இதையொட்டி நடந்த துவக்கநிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் அன்டோ, பயிற்சி முகாமை துவக்கிவைத்தார். ஆசிரிய பயிற்றுநர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கருத்தாளர்களாக செயல்பட்ட இப்பயிற்சி முகாமை ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாவட்ட பயிற்சி ஒருங்கிணைப்பாளர் மாடசாமி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஏற்பாடுகளை வட்டார கல்வி அலுவலர் அன்னலட்சுமி, வட்டார வள மைய  மேற்பார்வையாளர் பொறுப்பு அனுசுயா, மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன  விரிவுரையாளர் னிவாசன் செய்திருந்தனர்.

Tags : Manor ,Gangaikondan ,Chuttamalli ,
× RELATED மீண்டும் மீண்டுமா?.. ராமநாதபுரம் தொகுதியில் 6 பன்னீர்செல்வம் போட்டி!