×

நீடாமங்கலத்தில் ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாம்

நீடாமங்கலம், ஜூன் 8: நீடாமங்கலத்தில் ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் பயிற்சி நடை பெறுகிறது.122 ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெறுகின்றனர். திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியத்தில் 1 முதல் 3ம் வகுப்புகள் வரை தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதப் பாடங்கள் கற்பிக்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு நீடாமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளியில் எண்ணும், எழுத்தும் பயிற்சி 6 முதல் 10ம் தேதி வரை 5 நாட்கள் பயிற்சியாக நடை பெற்று வருகிறது. பயிற்சியில் 122 ஆசிரியர்கள் பங்கேற்றுள்ளனர். பயிற்சியினை நேற்று மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் சிவசுப்ரமணியன் பார்வையிட்டு ஆசிரியர்களுக்கு ஆலோசனை வழங்கினார். இப் பயிற்சியில் பயிற்சி ஒருங்கிணைப்பாளரும் ,மன்னார்குடி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளருமான வசந்தி, நீடாமங்கலம் வட்டாரக் கல்வி அலுவலர்கள் சம்பத், முத்தமிழன், நீடாமங்கலம் வட்டார வள மைய மேற்பார்வையாளர்(பொ)சத்யா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags : Needamangalam ,
× RELATED உடல் ஆரோக்கியம் சீராக இருக்க இயற்கை...