×

நன்னிலம் அருகே பரிதாபம் பஸ் சக்கரத்தில் சிக்கி ஓஎன்ஜிசி ஊழியர் பலி

நன்னிலம், ஜூன் 8: நாகை மாவட்டம் கீழ்வேளூர் தாலுகா கீழையூர் கீழத் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து மகன் நவீன்ராஜ்(25). இவர் குத்தாலம் அருகில் உள்ள ஓஎன்ஜிசி நிறுவனத்தில் பணி புரிந்து வந்தார். சம்பவத்தன்று இவர் பணி முடிந்து டூவீலரில் வீடு திரும்பி கொண்டிருந்தார். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அடுத்துள்ள பூந்தோட்டம் அரசலாறு ஆற்று பாலம் அருகில் முன்னால் சென்ற அரசு பேருந்தை முந்த முயன்றார். அப்போது பேருந்தின் பின்பக்க சக்கரத்தில் சிக்கி, அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவலறிந்த பேரளம் போலீசார் விரைந்து வந்து நவீன்ராஜ் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து நவீன்ராஜ் தந்தை மாரிமுத்து கொடுத்த புகாரின்பேரில் பேரளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : ONGC ,Nannilam ,
× RELATED அனல் பறக்கும் பிரசாரத்தில்...