×

மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டியில் வென்ற குடந்தை அரசு கல்லூரி மாணவருக்கு பாராட்டு

கும்பகோணம், ஜூன் 8: தஞ்சாவூர் மாவட்ட அளவில் பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற கும்பகோணம் அரசினர் கலைக்கல்லூரி மாணவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. கடந்த ஜூன் 3ம் தேதி தஞ்சாவூர் ராஜா சரபோஜி அரசு கலைக்கல்லூரியில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பாக தஞ்சை மாவட்ட அளவிலான கலைஞரின் 99வது பிறந்தநாள் விழா பேச்சுப்போட்டி நடைபெற்றது. இதில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அரசினர் கலைக்கல்லூரிகளை சேர்ந்த ஏராளமானோர் இந்த போட்டியில் கலந்து கொண்டனர். இதில் கும்பகோணம் அரசினர் கலைக்கல்லூரியின் (தன்னாட்சி) தமிழ்த்துறையை சேர்ந்த சந்துரு என்ற மாணவர் கலந்துகொண்டு இரண்டாமிடம் பிடித்து ரூ.3,000 ரொக்கப்பரிசையும், பாராட்டு சான்றிதழையும் பெற்றார். இப்பரிசினை பெற்ற மாணவரை கல்லூரி முதல்வர் துரையரசன் பாராட்டினார். இந்நிகழ்வில் நுண்கலை மன்ற உறுப்பினர் கோபாலகிருஷ்ணன் மற்றும் விவேகானந்தன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : Kuttan Government College ,
× RELATED குளச்சல் அருகே மீன்பிடித் தொழிலாளியிடம் செல்போன் திருடியவர் கைது