×

தாந்தோணிமலை- சுங்ககேட் இடையே சாக்கடை வடிகால் பணி தாமதத்தால் கடும் போக்குவரத்து நெருக்கடி

கரூர், ஜூன் 8: கரூர் தாந்தோணிமலையில் இருந்து சுங்ககேட் வரை சாலையோரம் சாக்கடை வடிகால் அமைக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே, இந்த சாலையின் மையத்தில் தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. அதிகளவு வாகனங்கள் இந்த சாலையில் சென்று வரும் நிலையில், பணிகள் மிகவும் மந்தமாக நடைபெறுவதால் இந்த சாலையில் தினமும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. மேலும், வடிகால் அமைக்கும் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டு, பணிகள் முடிந்தும், மண்பரப்புகள் அகற்றப்படாமல் உள்ளதால் மற்ற வாகனங்கள் இந்த பகுதியின் வழியாக எளிதாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. சில சமயங்களில் சிறு விபத்துக்களும் இதன் காரணமாக நடைபெற்று வருகிறது. எனவே, இதுபோன்ற நிகழ்வுகளை கட்டுப்படுத்தும் வகையில் இந்த பகுதியில் நடைபெற்று வரும் வடிகால் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

Tags : Thanthonimalai ,Sungaket ,
× RELATED தாந்தோணிமலை அரசு குடியிருப்பு பகுதியில் இடிந்த நிலையில் நாடக மேடை