மதுக்கரை: கோவை மதுக்கரை பிருந்தாவன் நகரை சேர்ந்தவர் ராமசீதாபதி. இவரது மகள் ராமஷிவாணி (21). இவர் எம்பிபிஎஸ் முடித்துவிட்டு கோவை அரசு மருத்துவமனையில் பயிற்சி டாக்டராக பணியாற்றி வந்தார். நேற்று காலை வழக்கம்போல் காரில் கோவை அரசு மருத்துவமனைக்கு புறப்பட்டார். கார் சேலம்-கொச்சி நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே வந்தது. அப்போது எதிரே வந்த லாரியும், காரும் நேருக்கு நேர் மோதின. இதில் சம்பவ இடத்திலேயே டாக்டர் ராமஷிவாணி உயிரிழந்தார். திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த லாரி டிரைவர் தில்லைராஜன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.