×

அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார் மேட்டுப்பாளையம் பேரூராட்சியில் தூய்மை பணி விழிப்புணர்வு முகாம்

தா.பேட்டை, ஜூன் 7: தா.பேட்டை அடுத்த மேட்டுப்பாளையம் பேரூராட்சியில் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின் செயல்பாடுகளை மக்களிடத்தில் கொண்டு செல்லும் வகையில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் சவுந்திரராஜன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் செல்வி, கோவிந்தசாமி, பேரூராட்சி செயல் அலுவலர் குமார் மன்ற உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். அப்போது பேரூராட்சியை தூய்மையாக பராமரிப்பது, வீடுகளில் குப்பைகள் தரம் பிரித்து வாங்குதல், விழாக்கள், பண்டிகை நேரத்தில் சிறப்பு தூய்மை பணிகள், சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.  துப்புரவு பணியாளர்கள் பேரூராட்சியை தூய்மையாக பராமரிப்போம் என உறுதிமொழி ஏற்றனர். தொடர்ந்து பேரூராட்சி பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டது. முகாமில் பேரூராட்சி தலைமை எழுத்தர் சம்பத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

140 பேருக்கு பாட்டா: எம்எல்ஏ கதிரவன் வழங்கினார்
மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 140 பயனாளிகளுக்கு இலவச மனைப்பட்டா வழங்கும் நிகழ்ச்சி நெ.1 டோல்கேட்டில் நேற்று நடந்தது. நகர்ப்புற வளர்ச்சித்துறை மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு திட்டத்தை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். மாவட்ட கலெக்டர் சிவராசு தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் மண்ணச்சநல்லூர் தொகுதி எம்எல்ஏ கதிரவன், தொகுதிக்கு உட்பட்ட 140 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார்.

Tags : Minister ,KN Nehru ,Cleaning Work Awareness Camp ,Mettupalayam Municipality ,
× RELATED தொடர்ந்து தமிழகத்திற்கு வரும்...