×

கந்தர்வகோட்டை ஊராட்சியில் பழுதடைந்த குப்பை அள்ளும் வண்டி புதிய டிராக்டர் வழங்க பொதுமக்கள் கோரிக்கை

கந்தர்வகோட்டை, ஜூன் 6: புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஊராட்சியில் இருபது தெருக்களுக்கு மேல் உள்ளது. மேலும் பிரதான கடை வீதிகளும், உள்ள நிலையில் ஊராட்சி மன்றம் மூலம் தினசரி துப்புரவு பணியாளர்களை வைத்து துப்புரவு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்கள் சேகரிக்கின்ற குப்பைகளை ஊராட்சி மன்றத்திற்கு சொந்தமான டிராக்டரில் ஏற்றி ஊரின் எல்லை பகுதியில் கொண்டு சென்று கொட்டி வருவார்கள். தற்சமயம் அந்த டிராக்டர் முழு பழுது அடைந்த நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் வாடகைக்கு வாகனம் எடுத்து குப்பை அள்ளும் பணியில் ஈடுபட்டு வருகிறார். கந்தர்வகோட்டை ஊராட்சிக்கு சொந்தமான டிராக்டர் முழு பழுதடைந்துள்ள நிலையில் இருப்பதால் மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு கந்தர்வகோட்டை ஊராட்சி மன்றத்திற்கு புதியதாக டீசலில் இயங்கும் குப்பை அள்ளும் டிராக்டர் ஒன்றை வாங்கி தரும்படி கந்தர்வகோட்டை ஊர் பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Kandarvakotta ,
× RELATED கறம்பக்குடி அருகே மோகனூரில் இல்லம்...