×

கீழ்வேளூர் தாலுகாவில் நாளை ஜமாபந்தி தொடக்கம்

கீழ்வேளூர், ஜூன் 6: நாகை மாவட்டம் கீழ்வேளூர் தாலுகாவில் வருவாய் கணக்குகள் ஆண்டு தணிக்கை (ஜமாபந்தி) நாளை (7ம் தேதி) தொடங்கி 14ம் தேதி வரை நடைபெறுகிறது. அதன்படி கீழ்வேளூர், தேவூர், கீழையூர், வேளாங்கண்ணி ஆகிய வருவாய் சரகங்களில் உள்ள55 வருவாய் கிராமங்களில் உள்ள ஆண்டு கணக்குகள் மாவட்ட வருவாய் அலுவர் ஷகிலா தலைமையில் நடைபெறுகிறது. அதன் படி வரும் 7,8 ஆகிய தேதிகளில் கீழ்வேளூர் வருவாய் சரகத்தில் உள்ள கிராமங்களுக்கும், 9ம்தேதி தேவூர் வருவாய் சரகத்தில் உள்ள கிராமங்களுக்கும், 10ம் தேதி வேளாங்கண்ணி வருவாய் சரகத்தில் உள்ள கிராமங்களுக்கும், 14ம் தேதி கீழையூர் வருவாய் சரகத்தில் உள்ள கிராமங்களுக்கும் நடைபெறுகிறது. கீழ்வேளூர் தாலுகாவில் உள்ள பொதுமக்கள் பட்டா மாற்றம், முதியோர் உதவித் தொகை, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தங்கள் வருவாய் சரகத்திற்கு என்று ஒதுக்கப்பட்ட நாளில் மனு கொடுத்து பயன் பெறலாம். என கீழ்வேளூர் தாசில்தார் ராஜசேகர் தெரிவித்துள்ளார்.

Tags : Jamabandi ,Lower Vellore taluka ,
× RELATED அணைக்கட்டு தாலுகாவில் 2ம் நாள்...