×

ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை முகாம்

கரூர், ஜூன் 6: கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கூட்டுறவுத்துறை மற்றும் மருத்துவம் மற்றும் குடும்பநலத்துறை இணைந்து அனைத்து பொது விநியோகத் திட்ட நியாய விலைக்கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்களுக்காக நடத்தப்பட்ட முழு உடல் பரிசோதனை சிறப்பு முகாமினை கலெக்டர் பிரபு சங்கர் பார்வையிட்டு தெரிவித்துள்ளதாவது: கரூர் மாவட்டத்தில் இந்த முகாம் நியாய விலைக்கடைகளில் பணிபுரியும் 298 விற்பனையாளர்களுக்கு நடத்த திட்டமிடப்பட்டு முதற்கட்டமாக 30 பணியாளர்களுக்கு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த முழு உடல் பரிசோதனை முகாமில், காது, மூக்கு, தொண்டை, கண்பார்வை, பற்கள் மற்றும் இதயதுடிப்பு பரிசோதனை உட்பட பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன என்றார். இதனைத் தொடர்ந்து அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள தீவிர சிகிச்சை பிரிவுகளில் நவீன உபகரணங்களுடன் கூடிய ஆக்ஸிஜன் படுக்கைகள் கொண்ட செவிலியர் கண்காணிப்பு மையத்தை கலெக்டர் பார்வையிட்டார். இந்த நிகழ்வில் கல்லூரி முதல்வர் முத்துச்செல்வன், நிலைய மருத்துவ அலுவலர் தெய்வநாதன், கூட்டுறவுத்துறை மண்டல இணைப்பதிவாளர் இளஞ்செல்வி உட்பட அனைத்து அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Tags : Ration Store Vendors ,
× RELATED கடனுதவி வழங்க விவசாயிகள் கோரிக்கை...