×

தலைமை செயலகம் அருகே தீக்குளித்த முதியவர் பலி

சென்னை: தலைமை செயலகம் பேருந்து நிலையம் அருகே கடந்த 1ம் தேதி முதியவர் மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார். பொதுமக்கள் தீயை அணைத்து அவரை மீட்டனர். தகவலறிந்த கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தீக்குளித்த முதியவரை 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். விசாரணையில், திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த பொன்னுசாமி(72), ரயில்வே ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் என தெரியவந்தது. மேலும் தனக்கு தெரிந்த ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் சுப்பிரமணி (எ) ஆனந்த் என்பவரிடம் ரூ.14 லட்சம் கடன் கொடுத்து ஏமாந்ததால் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பொன்னுசாமி நேற்று பலியானார்.

Tags : General Secretariat ,
× RELATED மீண்டும் சென்னையில் வெடிகுண்டு...