×

அண்ணா விளையாட்டு மைதானத்தில் வாகனங்களை நிறுத்த அனுமதி

கடலூர், ஜூன் 4: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மாவட்ட செயலாளர் மாதவன், கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள, கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: கடலூர் மஞ்சகுப்பம் அண்ணா விளையாட்டு, மைதானத்தில், கொரோனா நோய்த்தொற்றுக்கு பிறகு, தற்போது பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களின் வாகனங்களை, அருகில் உள்ள இடத்தில் இதுவரை நிறுத்தி வருகின்றனர்.

ஆனால் முன்பு போல வாகனங்களை, உள்ளே நிறுத்த, நிர்வாகம் அனுமதி மறுத்து வருகிறது. வாகனங்களை வெளியே நிறுத்தும்போது, சமூக விரோதிகளால் சேதம் விளைவிக்கப்படுகிறது. மேலும் வாகனங்கள் களவு போகிறது. எனவே பொதுமக்கள் நலன் கருதி, வாகனங்களை, விளையாட்டு மைதானத்தின் உள்ளே நிறுத்த அனுமதி வழங்க வேண்டும். மேலும் விளையாட்டு மைதானத்தின் பிரதான நுழைவு வாயில், நீண்ட நாட்களாக மூடி கிடக்கிறது. அதை திறந்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags : Anna playground ,
× RELATED குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள்-மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு