×

தமிழ்நாட்டின் வளர்ச்சியில் கலைஞரின் பங்கு அளப்பரியது ஐ.பி. செந்தில்குமார் எம்எல்ஏ பேச்சு

பழநி, ஜூன் 4: திண்டுக்கல் கிழக்கு மாவட்டம், பழநியில் நகர மற்றும் ஒன்றிய திமுக சார்பில் கலைஞரின் 99வது பிறந்த தினத்தை முன்னிட்டு பாலசமுத்திரம், நெய்க்காரப்பட்டி, ஆயக்குடி, பச்சள நாயக்கன்பட்டி மற்றும் பழநி பஸ் நிலையம், மின்வாரிய திடல், சத்யா நகர் உள்ளிட்ட பகுதிகளில் கட்சி கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

இதை தொடர்ந்து பழநி அரசு மருத்துவமனையில் நேற்று பிறந்த 8 குழந்தைகளுக்கு ஐ.பி.செந்தில்குமார் எம்எல்ஏ தனது சொந்த செலவில் தங்க நாணயங்கள் வழங்கினார். தொடர்ந்து தாய்மார்களுக்கு சத்து உணவுகள் மற்றும் பழங்கள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் எம்பி வேலுச்சாமி, பழநி யூனியன் தலைவர் ஈஸ்வரி கருப்புசாமி, நகரச் செயலாளர் தமிழ்மணி, நகராட்சித் தலைவர் உமா மகேஸ்வரி, தலைமை செயற்குழு உறுப்பினர் வேலுமணி, ஒன்றிய செயலாளர் சௌந்தரபாண்டியன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பிரபாகரன், பேரூர் செயலாளர்கள் அபுதாஹீர், சுப்புராமன், சின்னத்துரை, பேரூராட்சி தலைவர்கள் ராஜராஜேஸ்வரி, மேனகா, காளியாத்தாள், துணைத்தலைவர்கள் சகுந்தலா மணி, சுதா மணி, விஜய் கிருஷ்ணன், ஊராட்சித் தலைவர்கள் நாகராஜன், சின்னத்துரை, நகரத் துணைச் செயலாளர் சக்திவேல், நகர இளைஞரணி அமைப்பாளர் லோகநாதன், மாவட்ட விவசாய அணி நிர்வாகி மகேந்திரன், ஒன்றிய பிரதிநிதி ஆனந்தன், மாவட்ட பிரதிநிதிகள் மயில்சாமி, அழகேசன், ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் கண்ணன், நகராட்சி கவுன்சிலர்கள் காளீஸ்வரி, மகேஸ்வரி, இந்திரா, பாசமலர், வீரமணி, மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் காளிமுத்து, நகர நெசவாளர் அணி அமைப்பாளர் பாஸ்கரன், முன்னாள் பேரூராட்சித் தலைவர் வாசுகி சிவஞானம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் ஐ.பி.செந்தில்குமார் எம்எல்ஏ பேசியதாவது,
தமிழ்மொழியின் உயர்விற்கும், வளர்ச்சிக்கும் அடித்தளமாக விளங்கியவர் கலைஞர். சமூக நீதியின் இலக்கணமாக விளங்கியவர். பெண் கல்வியை ஊக்குவித்தவர். பெண்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் 33 சதவீத இடஒதுக்கீடு தந்தவர். தமிழகத்திற்கு ஏராளமான அணைகளை கட்டி தந்தவர். பழனி பகுதியில் உள்ள 3 அணைகளும் திமுக தலைவர் கலைஞரால் கட்டப்பட்டவை. மாணவ மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ் தந்தவர். தமிழகம் இந்தியாவின் பல மாநிலங்களுக்கு முன்னோடியாக திகழ்ந்து வருகிறது. தமிழகத்தின் வளர்ச்சியில் கலைஞரின் பங்கு அளப்பரியது. இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Tamil Nadu ,Senthilkumar ,MLA ,
× RELATED மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான...