திண்டுக்கல்: திண்டுக்கல் சீலப்பாடி அருகேயுள்ள கிருஷ்ணன் கோயில் மைதானத்தில் எச்எப்ஏ கால்பந்தாட்ட கழகம், மாவட்ட கால்பந்தாட்ட கழகம் இணைந்து நடத்தும் மாநில அளவிலான ஐவர் கால்பந்தாட்ட போட்டிகள் நேற்று துவங்கியது. முதல் நாள் போட்டியில் 10 வயதுக்குட்பட்ட இரு பாலருக்கான கால்பந்தாட்ட போட்டிகள் லீக் முறையில் நடந்தது. திண்டுக்கல், சேலம், ஈரோடு, மதுரை, தஞ்சாவூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து 12 அணிகள் பங்கேற்றன. இறுதி ேபாட்டியில் ஹெச்எப்ஏ அணியும், 7 டாலஸ் அணியும் விளையாடின. இரு அணியும் கோல் எடுக்காததால், பின்னர் டை பிரேக்கர் முறையில் விளையாடிய ஹெச்எப்அணி 1:0 என்ற கோல் கணக்கில் முதலிடத்தை பிடித்தது. 2, 3, 4ம் இடங்கள் 7 டாலஸ், மேரி மாதா, கிளாடியேட்டர் அணிகள் பிடித்தன. வெற்றி பெற்ற அணிகளுக்கு திண்டுக்கல் சேர்மன் ராஜா கோப்பை, பதக்கம் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார். இதில் மாவட்ட கால்பந்தாட்ட கழக செயலர் சண்முகம், ஒன்றிய கவுன்சிலர் வெங்கடேஷ், ஹெச்எப்ஏ கால்பந்தாட்ட கழகத்தின் பயிற்சியாளர் சதீஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.