×

எருமனூர், விஜயமாநகரம் ஊராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகள் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

விருத்தாசலம், ஜூன் 2: விருத்தாசலம் ஒன்றியம் எருமனூர் மற்றும் விஜயமாநகரம் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி துறையின் மூலம் மேற்கொள்ளப்படும் திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் ஆய்வு மேற்கொண்டார்.
விஜயமாநகரம் ஊராட்சியில் பண்ணை குட்டை மற்றும் நீர் உறிஞ்சி குழி அமைக்கும் பணி, பிரதம மந்திரி வீடு கட்டும்  திட்டத்தின் கீழ் வீடு கட்டுமான பணி, எருமனூர் ஊராட்சியில் தீவன புல் சாகுபடி மற்றும் அருந்ததியர் காலனி, எருமனூர் காலனி மற்றும் எருமனூர் வடகுப்பம சாலை பணிகள் நடைபெறுவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து விருத்தாசலம் மற்றும் முஷ்ணம் ஊராட்சி ஒன்றியத்தில் வீடு கட்டும் திட்டம் குறித்து விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் ஊராட்சி  செயலர்களுக்காக நடந்த ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டு, ஒவ்வொரு ஊராட்சியிலும் நடந்து வரும் வீடுகள் கட்டும் திட்டம் எந்த அளவிற்கு நடந்து முடிந்துள்ளது என்பது குறித்து விவரம் கேட்டறிந்தார். பணிகள் அனைத்தையும் விரைவில் முடிக்க அறிவுறுத்தினார். கூடுதல் ஆட்சியர் பவன்குமார் ஜி கிரியப்பனவர், செயற்பொறியாளர் தணிகாசலம், உதவி செயற்பொறியாளர் சண்முகசுந்தரம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விருத்தாசலம் ஜெயக்குமாரி, முருகன், முஷ்ணம் ராஜசேகர், உதவி பொறியாளர்கள் செந்தில், தேன்மொழி, ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள் விஜயகுமார், ஆரோக்கிய விமலா மேரி, எருமனூர் ஊராட்சி மன்ற தலைவர் சவுமியா வீரமணி, விஜயமாநகரம் ஊராட்சி மன்ற தலைவர் வீரம்மாள் பழனிசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags : District Collector ,Erumanur ,Vijayanagaram ,
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...