×

சாத்தான்குளம் அருகே தொழிலாளி மர்மசாவு

சாத்தான்குளம்: சாத்தான்குளம் அருகே உள்ள அமுதுண்ணாக்குடியை சேர்ந்தவர் மகாராஜன் (65), கூலி தொழிலாளி. இவரது மனைவி முருகம்மாள் (55). மகாராஜன், மனைவி மீது சந்தேகமடைந்து அவரிடம் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு கணவன், மனைவிக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று காலை மகாராஜன் வீட்டில் தூங்கிய நிலையில் இறந்து கிடந்தார். அவருக்கு கழுத்தில் நகக் கீறல்கள் இருந்துள்ளது. தகவலறிந்த சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று மகாராஜன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர். மகாராஜன் கொலை செய்யப்பட்டாரா அல்லது அவரது சாவுக்கு வேறு காரணமா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

Tags : Sathankulam ,
× RELATED சாத்தான்குளம்- பண்டாரபுரம் சாலையில்...