×

எட்டயபுரத்தில் இலவச ஆடுகள் வழங்கல்

எட்டயபுரம்: கோவில்பட்டி யூனியனுக்குட்பட்ட இனாம்மணியாச்சி, கடலையூர், வில்லிசேரி, துறையூர், எட்டயபுரம், ஜமீன்தேவர்குளம், இளையரசனேந்தல் பகுதிகளை சேர்ந்த 100 பெண் பயனாளிகளுக்கு இலவச ஆடுகள் வழங்கும் நிகழ்ச்சி, எட்டயபுரம் கால்நடை மருத்துவமனையில் நடந்தது. யூனியன் சேர்மன் கஸ்தூரி சுப்புராஜ் தலைமை வகித்து பயனாளிகளுக்கு ஆடுகளை வழங்கினார். தூத்துக்குடி மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் ராஜன், எட்டயபுரம் டி.கே. 27. தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் ஆழ்வார் உதயகுமார், வார்டு கவுன்சிலர் ஆண்டாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோவில்பட்டி கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநர் விஜய, கால்நடை உதவி மருத்துவர்கள் கண்ணபிரான், செல்வி, கனகலட்சுமி, கனிமொழி, உள்பட பலர் கலந்து கொண்டனர்

Tags : Ettayapuram ,
× RELATED எட்டயபுரம் அருகே லாரி ஏற்றி மாமனார்...