×

துறையூர் அருகே கன்று குட்டியுடன் 2 பசுக்கள் திருட்டு

துறையூர், ஜூன் 2: துறையூர் அடுத்த சிக்கத்தம்பூர் காளி மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஜெயக்கண்ணன்(55). இவர் 2 பசு மாடுகள் மற்றும் ஒரு கன்று குட்டி வளர்த்து வந்தார். அவைகளுக்கு நேற்று முன்தினம் (மே 30) இரவு 10 மணிக்கு உணவு கொடுத்து விட்டு தனது வயலில் கட்டி போட்டு வீட்டு வீட்டுக்கு உறங்க சென்றார். மறுநாள் சென்று பார்த்தபோது 2 பசு மாடுகள், கன்று குட்டியையும் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் உப்பிலியபுரம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags : Thuraiyur ,
× RELATED துறையூர் அருகே கார், ஆட்டோ மோதல் முதியவர் பரிதாப பலி