×

சமயபுரம் அருகே டூவீலர் திருட்டு: 4 பேருக்கு வலை

முசிறி, ஜுன் 2: சமயபுரம் அருகே உள்ள இருங்களூர் ஊராட்சிக்குட்பட்ட வடக்கு இருங்களூரை சேர்ந்தவர் சேசுராஜ் (38). தனது வீட்டருகே டூவீலரை நிறுத்திவிட்டு டீக்கடைக்கு சென்றார். அப்போது ஒரு பைக்கில் வந்த நான்கு பேர் டூவீலரை திருடிச் சென்றனர். இதுகுறித்து சேசுராஜ் சமயபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் நடத்திய விசாரணையில் மர்மநபர்கள் திருடிய டூவீலருடன் இருங்களுரிலிருந்து திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை வழியாக சமயபுரம் சுங்கச்சாவடியினை கடந்து செல்லும் சிசிடிவி காட்சிகள் பதிவாகியுள்ளது. இதனை வைத்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags : Samayapuram ,
× RELATED திருச்சி சமயபுரம் மாரியம்மன்...