×

பேராவூரணியில் முழு சுகாதார விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

பேராவூரணி, ஜூன் 2: பேராவூரணி புதிய பஸ் நிலையத்தில் முழு சுகாதார விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. தஞ்சை மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குனர் கனகராஜ் உத்தரவுப்படி நடந்த இந்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு, மழைநீர் சேகரிப்பு, பன்றிக் காய்ச்சல் விழிப்புணர்வு, முழு சுகாதாரம் குறித்து ஆடல், பாடல், நாடகம் மூலம் தஞ்சை நாடக குழுவினர் பாத்திமா, அன்பழகன் உள்ளிட்டோர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் பஸ் நிலையத்தில் பஸ்சிற்காக காத்திருந்த பொதுமக்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சியை பார்த்து ரசித்தனர். நிகழ்ச்சிக்கு பேரூராட்சி செயல் அலுவலர் பழனிவேலு தலைமை வகித்தார். பேரூராட்சி தலைவர் சாந்தி சேகர் முன்னிலை வகித்தார். பேரூராட்சி உறுப்பினர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதேபோல் நகரின் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

Tags : Full Health Awareness Art Show ,Peravurani ,
× RELATED பேராவூரணி அருகே 70 அடி ஆழ கிணற்றில் விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு