×

தாராபுரத்தில் கலைஞரின் முழு உருவ வெண்கலச் சிலை அமைச்சர் அமைத்து தருவதாக அறிவிப்பு

தாராபுரம்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நகர திமுக சார்பில் செயற்குழு கூட்டம் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. நகர செயலாளர் தனசேகர், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் நகர செயலாளர் தனசேகர் பேசுகையில், கலைஞரின் 99வது பிறந்தநாளை கொண்டாட திமுகவின் இளைஞர் அணி மற்றும் சார்பு அமைப்புகள் அனைவரும் முழு ஒத்துழைப்புடன் இணைந்து செயலாற்றுவது என்றும் ஜூன் மாதம் முழுவதும் கலைஞரின் பிறந்தநாள் நிகழ்ச்சிகளை நடத்தபடும் என்றார்.கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: அமைச்சர் மு.பெ.சாமிநாதனின் தாயார் தங்கமணி அம்மாளின் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பது.

வரும் 3ம் தேதி கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு அனைத்து வார்டுகளிலும் கழக கொடியை ஏற்றி வைத்து தெருமுனை கூட்டம் நடத்துவது.திமுக அரசின் ஓராண்டு சாதனைகளை விளக்கியும், திராவிட மாடல் ஆட்சி குறித்து பிரச்சாரம் செய்வது என்றும் தமிழக முதல்வரின் சாதனைகளை துண்டு பிரசுரங்களாக தினமும் பொதுமக்களிடையே வினியோகிப்பது என்றும், தாராபுரத்தில் முழு உருவ வெண்கலச்சிலை அமைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுப்பது என்றும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கூட்டத்தில் மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் செல்வராஜ் பேசுகையில், தாராபுரத்தில் அமைக்கப்படும் தலைவர் கலைஞரின் முழு உருவ வெண்கல சிலையை அமைச்சர் கயல்விழி தனது சொந்த செலவில் அமைத்து தருவதாக ஒப்புதல் அளித்துள்ளார் என்றார்.நிகழ்ச்சியில் திமுக அவைத்தலைவர் ராஜேந்திரன், நகர்மன்ற தலைவர் பாப்பு கண்ணன், நகர திமுக இளைஞரணி அமைப்பாளர் முருகானந்தம், நகர்மன்ற உறுப்பினர்கள் துரை சந்திரசேகர், யூசுப், சீனிவாசன், அன்பழகன், உமா மகேஸ்வரி, ரஹமத்துல்லா, உதயச்சந்திரன், அன்பு முத்து மாணிக்கம், சசிகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Minister ,Tarapuram ,
× RELATED காங்கயத்தில் அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் அமைச்சர் மலர் தூவி மரியாதை