×

தருவைகுளம் கிராமத்துக்கு ஆம்புலன்ஸ் வசதி கோரி மனு

தூத்துக்குடி, மே31: தருவைகுளம் ஊர்பொதுமக்கள் கலெக்டரிடம் கொடுத்துள்ள கோரிக்கை மனு: தருவைகுளம் கிராமத்தில் சுமார் 2500க்கு மேற்பட்ட குடும்பங்களும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களும் வாழ்ந்து வருகிறோம்.
   எங்கள் ஊரின் முதன்மைத் தொழிலாக கடல் தொழில்இருந்து வருகிறது. எங்கள் ஊரில் கடல் சம்பந்தமாக அதிக விபத்துகள் ஏற்படுகின்றன. விபத்தால் பாதிக்கப்பட்டவர்களை குறிப்பிட்ட நேரத்திற்குள் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல போதுமான ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் பல உயிர் இழப்பு ஏற்படுகின்றன.   இதனை தவிர்த்திட எங்கள் கிராமத்திற்கு என்று நிரந்தரமான ஆம்புலன்ஸ் வசதி செய்து தரவேண்டும் என்று அதில் கூறியுள்ளனர்.

Tags : Daruvaikulam ,
× RELATED தருவைகுளத்தில் திருப்பயணிகள் இல்லம் திறப்பு