×

நவதானிய அலங்காரத்தில் விஸ்வரூப ஆஞ்சநேயர்

கும்பகோணம், மே 31: கும்பகோணம் விஸ்வரூப ஜெயமாருதி சன்னிதானத்தில் நேற்று வைகாசி அமாவாசையை முன்னிட்டு நவதானிய சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. கும்பகோணம் பழைய பாலக்கரை காமராஜ் நகரில் அமைந்துள்ள விஸ்வரூப ஜெயமாருதி கோயிலில் நேற்று வைகாசி அமாவாசையை முன்னிட்டு 11 அடி உயரம் கொண்ட விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு நவதானியங்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனைத் தொடர்ந்து வெப்பத்தின் தாக்கம் குறைய வேண்டியும், பொதுமக்கள் நோய் நொடியின்றி சுகம் பெற வேண்டி சிறப்பு பிரார்த்தனையுடன் விசேஷ பூஜைகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விஸ்வரூப ஜெயமாருதி சன்னிதானத்தின் நிர்வாகிகள் ராமன் பட்டர், மோகன் பட்டர், பாலாஜி பட்டர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

Tags : Viswaroopam Anjaneyar ,Navadhaniya ,
× RELATED நவதானிய தோசை