×

ஒரத்தநாடு அருகே அரசு டவுன் பஸ்சை வழிமறித்து டிரைவரை தாக்க முயன்றவர் கைது

ஒரத்தநாடு, மே 31: ஒரத்தநாடு அருகே அரசு டவுன் பஸ்சை வழிமறித்து டிரைவரை தாக்க முயன்றவரை போலீசார் கைது செய்தனர். தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள ஆயங்குடி கிராமத்தை சேர்ந்தவர் மொட்டையன். இவரது மகன் முனியன்(45). இவர் நேற்று முன்தினம் ஆயங்குடி கிராமத்திலிருந்து தெரு வழியாக மெயின் சாலைக்கு புல்லட்டில் வந்துள்ளார். அப்போது ஒரத்தநாட்டை நோக்கி அரசு டவுன் பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக புல்லட் மற்றும் பஸ் நேருக்கு நேர் மோதும் அபாயம் ஏற்பட்டது. இதில் சுதாகரித்துக் கொண்ட அரசு பஸ் டிரைவர் பஸ்சை நிறுத்திவிட்டார். இதில் ஆத்திரமடைந்த முனியன் பஸ் டிரைவரை தகாத வார்த்தைகளால் திட்டி அவரை தாக்க. முயற்சித்துள்ளார். இதில் டிரைவர் கண்ணன் ஒரத்தநாடு காவல் நிலையத்தில் முனியன் மீது புகார் அளித்தார். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். ஒரத்தநாடு சப்-இன்ஸ்பெக்டர் சூரியா மற்றும் சிறப்பு எஸ்ஐ., சேகர் ஆகியோர் முனியன் மீது அரசு பணியாளர்களை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அரசு பஸ் டிரைவரை ஒருவர் தாக்க முயன்றது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : Government Town ,Orathanadu ,
× RELATED ஒரத்தநாட்டில் தீ தொண்டு நாள், வார...