ஆண்டிமடம், மே 31: அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே தனியார் நர்சிங் கல்லூரியில் டிப்ளமோ நர்சிங் படிக்கும் மாணவி கல்லூரி விடுமுறை என்பதால் அவரது வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று ஜெயங்கொண்டம் சென்று வருவதாக கூறி சென்றவர் மாலை வெகு நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை. பெற்றோர்கள் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் எங்கு தேடியும் கிடைக்காததால் ஆண்டிமடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் குணசேகரன் வழக்குப்பதிந்து மாணவியை தேடி வருகின்றார்.