சீர்காழி, மே31:சீர்காழி வட்ட ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க கூட்டம் தலைவர் கல்யாணசுந்தரம் தலைமையில் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது கூட்டத்தில் சீர்காழி நகர் பகுதியில் மிகவும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாக கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னர் நில ஆர்ஜிதங்கள் மூலம் சாலைகள் அகலப்படுத்தப்பட்டன இதனால் போக்குவரத்து இடையூறுகள் குறைக்கப்பட்டது. ஆனால் தற்போதைய நிலையில் சீர்காழி நகர் பகுதியில் சாலையில் இரண்டு பக்கமும் பக்கத்திற்கு 15 அடி வீதம் சுமார் 30 அடிகளுக்கு மேல் வியாபாரிகளால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளது இதனால் பொதுமக்கள் மூத்த குடிமக்கள் விபத்துகளில் சிக்கி வருகின்றன. இந்த ஆக்கிரமிப்புகளை விரைவில் அகற்றப்படவில்லை என்றால் தொழிற்சங்கங்கள் மற்றும் தோழமைச் சங்கங்களோடு கலந்து பேசி ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி போராட்டம் நடத்த முடிவெடுக்கப்படும் என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்