×

சீர்காழி அருகே ஓமக்குளத்தில் முதலை பிடிபட்டது

சீர்காழி,மே 31: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மணல்மேடு வரதம்பட்டு சிவன் கோயில் தெருவில் அமைந்துள்ள ஓமக் குளத்தில் முதலை ஒன்று இருப்பதாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சீர்காழி வனத்துறை அலுவலகத்திற்கு தகவல் கொடுத்ததனர். அதன்படி வனச்சரக அலுவலர் ஜோசப் டேனியல், வனவர் செல்லையா, வனக்காப்பாளர்கள் ஆசைத்தம்பி, முத்துகிருஷ்ணன், செல்வகணபதி, டெப்போ வாச்சிங் கலையரசன் சம்பவ இடத்திற்கு சென்று குளத்தில் பதுங்கி இருந்த 4 அடி நீளம் கொண்ட, 12 கிலோ எடை கொண்ட முதலையை வலை வைத்துபிடித்து அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் பாதுகாப்பாக விட்டனர்.

Tags : Omakkulam ,Sirkazhi ,
× RELATED சீர்காழியில் வணிகர்கள் கடையடைப்பு போராட்டம்..!!