×

மனு அளிக்க வந்த திருநங்கைகள் பஞ்சமாதேவி பகுதியில் வடிகால் பாலம் பணியை விரைந்து முடிக்க வேண்டும்

கரூர், மே. 31: கரூர் மாவட்டம் பஞ்சமாதேவி பகுதியில் நடைபெற்று வரும் வடிகால் பாலம் பணியை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வடிகால் பாலம் சீரமைப்பு மற்றும் புதிதாக கட்டுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், கரூர் மாவட்டம் பஞ்சமாதேவி பகுதியில் வடிகால் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சாலையின் வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. பாலப் பணி காரணமாக மற்ற வாகனங்கள் எளிதாக செல்ல முடியாத நிலை நிலவி வருகிறது. எனவே, வாகன போக்குவரத்து எளிதாக நடைபெறும் வகையில் இந்த வடிகால் பாலம் கட்டும் பணியை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என வாகனஓட்டிகள் மற்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Panchamadevi ,
× RELATED மின்னாம்பள்ளி பஞ்சமாதேவி ஊராட்சியில்...