×

வேலாயுதம்பாளையம் அருகே தூங்கிக்கொண்டிருந்த கூலி தொழிலாளி மாடியில் இருந்து தவறி விழுந்து பலி

வேலாயுதம்பாளையம்,மே.31: வேலாயுதம்பாளையம் புகளூர் வள்ளுவர் நகர் அடுக்குமாடி இரண்டாவது தளத்தில் குடும்பத்துடன் குடியிருந்து வந்தவர் சக்திவேல்( 44 ).இவர் புகளூர் காகித ஆலையில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார் . இவரது மனைவி சந்தானலட்சுமி( 34).இந்நிலையில் சக்திவேலுக்கு தான் குடியிருக்கும் வீட்டின் மொட்டை மாடியில் உள்ள சுவற்றில் உட்கார்ந்து கொண்டு சிகரெட் மற்றும் மது அருந்தும் பழக்கம் இருந்து வந்தது.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அவரது மனைவி சந்தானலட்சுமி தனது குழந்தைகளுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார் .அப்போது சக்திவேல் மொட்டை மாடியில் கட்டில் போட்டு தூங்கி கொண்டு இருந்தார்.

இந்நிலையில் நேற்று காலை 6 மணி அளவில் சக்திவேல் குடியிருக்கும் வீட்டின் பின்புறம் குடியிருக்கும் கார்த்திகேயன் என்பவர் வீட்டிலிருந்து வெளியே வந்து பார்த்தபோது சக்திவேல் வீட்டின் மொட்டை மாடியில் இருந்து தவறி கீழே விழுந்ததில் கார்த்திகேயனின் வீட்டு காம்பவுண்ட் சுவர் இடிந்து சக்திவேல் மீது விழுந்ததில் அவருக்கு தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தவெள்ளத்தில் கீழே கிடந்ததை பார்த்துள்ளார். அதை பார்த்த கார்த்திகேயன் சத்தம் போடவே சந்தானலட்சுமி அங்கு விரைந்து சென்று பார்த்தபோது சக்திவேல் ரத்த வெள்ளத்தில் பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்துள்ளார். உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவரை வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சக்திவேலை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து சந்தான லட்சுமி வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் செய்தார் .புகாரின் பேரில் எஸ்ஐ பெரியசாமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : Velayuthampalayam ,
× RELATED புகழிமலை பாலசுப்பிரமணிய கோயிலில் திரளான பக்தர்கள் கிரிவலம்