×

பெண் மீது தாக்குதல்: ரேஷன் கடை விற்பனையாளருக்கு வலை

பண்ருட்டி, மே 31: பண்ருட்டி அருகே கீழ் கவரப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஜாகீர்உசேன். இவரது மனைவி நசீரா (48). இவர் சம்பவத்தன்று அதே கிராமத்தில் உள்ள நியாய விலை கடையில் மண்ணெண்ணெய் வாங்க சென்றுள்ளார். அந்த கடையில் விற்பனையாளராக பணி புரிந்து வரும் கோழிப்பாக்கம் மதுரைமுத்து மகன் செந்தில் (40) என்பவர் அவருடைய ரேஷன் கார்டை வாங்கிப் பார்த்துவிட்டு இந்த கார்டுக்கு மண்ணெண்ணெய் இல்லை என்று கூறியுள்ளார். மதியம் நேரம் என்பதால் நசீராவுக்கு சிறிது மயக்கம் வந்துள்ளது. அதனால் அவர் நிழலில் ஒதுங்கி நின்றுள்ளார்.  இதனால் ஆத்திரமடைந்த விற்பனையாளர் மண்ணெண்ணெய் இல்லை என்று சொல்கிறேன் மீண்டும் மீண்டும் நிற்கிறாய் என்று அவரை ஆபாசமாக திட்டி கையால் கடுமையாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த நசீரா பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து நசீரா கொடுத்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து நியாயவிலைக் கடை விற்பனையாளர் செந்திலை தேடி வருகின்றனர்.

Tags :
× RELATED `முதியோர் பென்சன் ₹8 ஆயிரம்...