×

உத்திரமேரூர் அருகே ரூ.1.43 கோடியில் புதிய மேம்பாலம்: க.சுந்தர் எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே ரூ. 1.43 கோடியில் புதிய மேம்பாலம் அமைக்க, க.சுந்தர் எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார். உத்திரமேரூர் அடுத்த  சிறுபினாயூர் - வடபாதி கிராமம் செல்லும் சாலையின் நடுவே பழுதடைந்த தரைப்பாலம் உள்ளது. இந்த தரைப்பாலத்தில் ஏற்பட்டுள்ள பழுது காரணமாக மழைக் காலங்களில் 2 கிராமங்களுக்கு இடையே போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவது வழக்கம். இந்த, பழுதான பாலத்தை அகற்றிவிட்டு புதிய மேம்பாலம் அமைத்து தர வேண்டும் என கிராம மக்கள் க.சுந்தர் எம்எல்ஏவிடம் கோரிக்கை வைத்தனர். அதன்பேரில், நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.1.43 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, புதிய மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

அதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. ஒன்றியக்குழு துணைத் பெருந்தலைவர் வசந்திகுமார் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்துகுமார், வரதராஜன், மாவட்ட குழு உறுப்பினர் சிவராமன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பெ.மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் தேன்மொழி வரவேற்றார். காஞ்சி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ கலந்துகொண்டு புதிய மேம்பால கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். இதில் சாலவாக்கம் ஒன்றிய செயலாளர் குமார், ஊராட்சி செயலாளர் சக்திவேல், வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Uttiramerur ,K. Sundar ,MLA ,
× RELATED பிரதமர் மோடி 10 முறை வந்தாலும் டெபாசிட்...