×

திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம்: இன்று நடக்கிறது

திருவள்ளூர்: திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் திருத்தணி எம்.பூபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  திருவள்ளூர் மேற்கு மாவட்டத்திற்குட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர் திமுக செயல்வீரர்கள் கூட்டம் இன்று (30ம் தேதி) மாலை 4 மணியளவில் திருத்தணி - அரக்கோணம் நெடுஞ்சாலையில் உள்ள என்.எஸ்.கே.டவரில் என்னுடைய தலைமையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்திற்கு எம்எல்ஏக்கள் வி.ஜி.ராஜேந்திரன், திருத்தணி எஸ்.சந்திரன், மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆர்.டி.இ.ஆதிசேசன், ஒ.ஏ.நாகலிங்கம், கே.திராவிடபக்தன், எஸ்.கே.ஆதாம், மா.ராகு, சரஸ்வதி சந்திரசேகர், இ.கே.உதயசூரியன், பி.ரவீந்திரநாத், கே.யு.சிவசங்கரி, ப.சிட்டிபாபு, எம்.பன்னீர்செல்வம், எம்.கோதண்டம், ஐ.சந்திரசேகர், மு.நாகன், பொதுக்குழு உறுப்பினர் வி.சி.ஆர்.குமரன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். திருத்தணி நகர செயலாளர் வி.வினோத்குமார் வரவேற்கிறார். இந்த கூட்டத்தில் வரும் ஜூன் 3ம் தேதி முன்னாள் முதல்வர் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாடப்படுவது குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது. எனவே, மேற்கு மாவட்டத்திற்குட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags : Tiruvallur West District DMK Activists Meeting ,
× RELATED முட்டுக்காட்டில் சுற்றுலா பயணிகளை...