×

ஏர்வாடி கடற்கரையில் ஒதுங்கிய இரும்பு பேரல்

கீழக்கரை, மே 28: கீழக்கரை  அருகேயுள்ள ஏர்வாடி அடஞ்சேரி கடற்கரையில் நேற்று திடீரென இரும்பு பேரல்  ஒன்று கரை ஒதுங்கியது. இதை கண்ட அப்பகுதி மக்கள் உடனே கீழக்கரை மரைன்  போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார்  அப்பேரலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதி மீனவர்கள் கூறுகையில், ‘இந்த  இரும்பு பேரல் மீன்பிடி படகில் தற்காப்பு மிதவைக்காக பயன்படுத்தக்கூடியவை.  தவறுதலாக படகிலிருந்து கீழே விழுந்து மிதந்து வந்ததாக இருக்கலாம்’  என்றார்.

Tags : Ervadi ,
× RELATED ஏர்வாடி அருகே கர்ப்பிணி தூக்கு போட்டு தற்கொலை ஆர்.டி.ஓ விசாரணை