×

கொல்லிமலை வட்டாரத்தில் விவசாயிகளுக்கு இடுபொருட்கள் பொன்னுசாமி எம்எல்ஏ வழங்கினார்

சேந்தமங்கலம், மே 27: கொல்லிமலை வட்டாரத்தில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில், விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கும் விழா, செம்மேடு வல்வில் ஓரி அரங்கத்தில் நடந்தது. அட்மா குழு தலைவர் செந்தில்முருகன் தலைமை வகித்தார். வேளாண்மை உதவி இயக்குனர் சத்யபிரகாஷ் முன்னிலை வகித்தார். இதில் சேந்தமங்கலம் பொன்னுசாமி எம்எல்ஏ கலந்து கொண்டு 55 விவசாயிகளுக்கு உதவித்தொகை, விசைத் தெளிப்பான், காய்கறி விதைகள், பிளாஸ்டிக்ட்ரம், வேளாண் இடு பொருட்களை வழங்கினார். உதவி இயக்குனர் சுதா, ஊராட்சி மன்ற தலைவர்கள் ஈஸ்வரன், சங்கீதா, பானு, செல்லம்மாள், வேளாண்மை துணை அலுவலர் சேகர், மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.


Tags : Ponnusamy ,Kollimalai ,
× RELATED கொல்லிமலை காப்புக்காட்டில் சுற்றுலா...